
5000 ரூபாவை வழங்குவதற்கான சுற்றுநிரூபம் கடந்த 15 நாட்களில் மூன்று முறை மாற்றியமைக்கப்பட்டதாகவும் இதன் மூலம் அரசாங்கத்தின் அரசியல் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிவதாகவும் மயில்வாகனம் திலகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களை நீக்கவும் புதியவர்களை உள்வாங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.
இடர் நிலையிலும் அரசியல் செய்ய முற்பட வேண்டாம் எனும் குரலை அரசாங்கத்திற்கு எதிராக உயர்த்த வேண்டி உள்ளதாகவும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.