Wednesday, February 28, 2018

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்தில் திருத்தம்

கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளின் பிரகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்வதற்கு ஏற்றவாறு , இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக விசாரணை ஆணைக்குழு சட்டத்தை திருத்த அராசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சட்டமூலத்தை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 1948ம் ஆண்டு 17ம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களினூடாக வௌியான விடயங்களின் பிரகாரம் லஞ்சம் தொடர்பான சட்டம் மற்றும் சொத்து மற்றும்ஆதனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரும் அதிகாரத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்க அராசங்கம் முடிவு செய்துள்ளது .அதற்காக சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

விசாரணை ஆணைக்குழுவின் மூலம் கண்டுபிடிக்கப்படுகின்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு வழக்கு தொடரும் அதிகாரத்தினை இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்க இந்த சட்டம் வழிவகுக்கும்.

இதற்காக, 1948ம் ஆண்டு 17ம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்தினை திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தினை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் அங்கீகரிக்க வேண்டும் என சட்டமாதிபர் அறிவித்துள்ளார். . இதற்கமைய புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதனை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அடுத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured