வருடா வருடம் இலங்கைக்கு வருகை தரும் ஃபிளமிங்கோ பறவைகள் இம்முறையும் மன்னார் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளன.
இப்புலம்பெயர் பறவைகளை தேடிச்சென்று புகைப்படமெடுத்துவரும் வனவிலங்கு புகைப்பட கலைஞர் முஹம்மத் ரசீம் அவர்களின் ஃபிளமிங்கோ பற்றிய அவதானிப்பு.
"மிகவும் அரிதான மற்றும் உணர் திறன் கொண்ட பறவையான ஃபிளமிங்கோக்கள் தற்போது இலங்கை மன்னார் பகுதிக்கு வருகை தந்து கூட்டம் கூட்டமாக உலாவி திரிகின்றன. உணவுத்தேவை, வானிலை மாற்றம், ஜோடிகளை தேர்ந்தெடுத்தல் போன்ற காரணங்களுக்காக இவை புலம்பெயருகின்றன.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இலங்கையை நோக்கி வரும் இப்பிளமிங்கோக்கள் மன்னார் பகுதியிலுள்ள ஈர நிலங்களில் சுமார் ஐந்து மாதங்கள் வரை கழித்துவிட்டுத்தான் நாட்டை விட்டு திரும்பும். அவை இலங்கையில் இருக்கும் காலப்பகுதியானது சுற்றுலாப்பயணிகளையும் புகைப்பட கலைஞர்களையும் அதிகமதிகம் கவர்கின்றன. இவை இலங்கை மட்டுமின்றி பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்கின்றன.
மன்னாரில் தற்போது சுமார் 3000 இற்கும் அதிகமான ஃபிளமிங்கோக்களை என்னால் அவதானிக்க கிடைத்து. ஆண்டுதோறும் வருகை தரும் பிளமிங்கோக்களின் எண்ணிக்கையில் தெளிவான ஏற்றத்தாழ்வை காணக்கூடியதாக உள்ளது.
2012 இல் 12,000 ஆக காணப்பட்ட ஃபிளமிங்கோக்கள் பின்னர் 1,500 ஆகவும், பின்னர் 7,000 ஆகவும் குறைந்தது. சென்ற வருடம் 3000 தெடக்கம் 5000 வறையிலான ஃபிளமிங்கோக்கள் காணப்பட்டதோடு இவ்வருடம் அவற்றின் வருகை 3,000 ஆக காணப்படுகின்றது.
இப்பிளமிங்கோக்களை பார்ப்பதற்கென உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. திருகோணமலையை சேர்ந்த நான் கடந்த மூன்று வாரங்களாக மன்னார் பகுதியில் தங்கி நின்று இப்பிளமிங்கோக்களை புகைப்படமெடுத்து வருகின்றேன்" என குறிப்பிட்டார்.