ஐ.எம். மிதுன் கான்
தினகரன் - கெக்கிராவ குறூப்
காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக 245,000/- தொகையை அனுப்பி வைத்துள்ள ஊற்றுப்பிட்டி ஒன்றிணைந்த உதவும் கரங்கள்.
இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலின் காரணமாக, பலஸ்த்தீன் காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை ஜனாதிபதிச் செயலகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்கான உதவித் தொகையாக, இரண்டு லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரம் ரூபாக்களை ஊற்றுப்பிட்டி ஒன்றிணைந்த உதவும் கரங்கள் அனுப்பி வைத்துள்ளது.
இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக, ஜனாதிபதி மூலம் அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, ஒன்றிணைந்த உதவும் கரங்கள் (UAH) ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதோடு, சொந்த நாட்டிலேயே உண்ண உணவின்றி ஒதுங்க இடமின்றி உடுத்த உடையின்றி நிம்மதியற்ற அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள அந்த காஸா மக்களுக்காக பிரார்த்திக்குமாறு ஊற்றுப்பிட்டி பிரதேசவாழ் மக்கள் மிகவும் பணிவுடன் வேண்டி நிற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.