Wednesday, January 31, 2024

ஆயிஷாவின் மனக்குமுறல்கள்...!!!

   


அல்லாஹ்வை அஞ்சி,ஐவேளை தொழுது,
இறையாணைக்கு கீழ்படியும் ஏழைக்குடும்பத்தின் மூத்த சொத்து தான் இந்த ஆயிஷா.
நான்கு பெண்பிள்ளைகளுடன் வாப்பாவின் கூலி தொழில் வருவாயுடன் பதுளை பிரதேசத்தில் கல்கந்த பகுதியில் வாழும் ஒரு குடும்பம்

வாப்பாவும் வறியவர்,கூலித்தொழில் செய்பவர்

  எத்தனை தான் வாப்பா செய்வாரு உண்ண உணவும் இல்லை, வாழ இல்லமும் இல்லை, வாப்பா உசுரோட இருந்தா உதவும் கரங்களும் இல்லை, வாப்பா உழைப்பாரு   பார்ப்பார் என்று ஊர்வாய்கள்   புலம்புமே தவிர,குடும்பமோ, உறவுகளோ,  ஊர் தனவந்தர்களோ,
பாடசாலை ஆசான்களோ நம் ஏழை மாணவர்களை இனங்கண்டு மறைமுகமாக  ஸதகா வழங்கவும் யாரும் இல்லை

O/ L பரீட்சைக்கு இன்னும் மூன்று மாதங்கள் தான் உம்மா, கணக்குக்கு மட்டும் ஒரு கிலாஸ் போடுங்க , என்று பதறித்துடித்தேன். என்னம்மா ஒன்டும் புரியாம பேசுராய், ஐந்து நாள் சோறு தின்டு,  வாப்பாக்கு வேலையும் இல்ல, சாமனும் வெல கூட்டி, எத்துனைய தான் செய்ய???
ஊடும் இல்ல, காணியும் இல்ல, சின்ன தங்கச்சி வேலைக்கு  போரதும் இல்ல, பசியும் தாங்க ஏலா , படிக்க வைக்க சல்லி கேட்டா வாப்பா  பிரச்சின பட்ராரு என்று கதறியழுதாள்,   

 ஆயிஷாவினால் தாங்க முடியவில்லை, அவளும் அவளது ஏனைய மூன்று சகோதரிகளும் கண்ணீர் சிந்தி அழுதுக்கொண்டே பாண் துண்டை பசிக்காக உண்டு முடித்தனர்,

சற்று நேரத்தில் பாத்ரூம் சென்ற ஆயிஷா  பிரஷர் மருந்தை அருந்திவிட்டு, உம்மா கவலைப்பட வானா  ஒரு புள்ள குறைந்தாலும் வாப்பாக்கு லேசா இருக்கும்,மத்த தங்கச்சிமார நல்லா படிக்க வைங்க உம்மா என்று கூறி அப்படியே மயங்கினால்,     கத்தி பதறிக்கொண்டு வைத்தியசாலைக்குள் ஆயிஷாவுடன் ஓடினாள் தாய், அனைத்து வைத்தியர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டனர்,
அதிகாலையில்  நிலமை சரியாக வரும் ,உம்மா என்று கூப்பிடுவாள் என்ன ஆவலுடன் சென்ற தாய் நோன்பு நோற்றுக் கொண்டு   சுபஹ் தொழுகையுடன் வைத்தியசாலைக்கு செல்ல ஆயத்தமானதும், உம் குழந்தை இறைவனிடம் சென்றுவிட்டாள் என்ற குரல் ஒளித்தது  

தற்போது இவளின் மரணச்செய்திக்கு பின்னால்  குடும்பம்,ஊரார்  கரம் நீட்டுகின்றனர்???
என்ன பயன்??

ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்
சுயநலவாதிகளாக வாழ்வதை விட்டும் தவிர்ந்துக்கொள்வோம்!!
ஊர்வாதம்,  பிரதேச வாதத்தை தவிர்ப்போம்!!!
ஊரில் உள்ள தனவந்தர்கள் ஏழைகளின் கண்ணீர் துடைக்க முன்வருவீர்!!
இப்படி எத்தனை ஆயிஷாக்கள் மனவிரக்தியுடன் வாழ்வார்களோ??? 
வேண்டாம் இந்த அவல நிலை நம் சமூகத்தில்,  ஸதகா ஸகாத் வழங்கும் மார்க்கம் அல்லவா???

இந்த ஆயிஷாவின் இன்னும் மூன்று தங்கைகள் இருக்கின்றனர்.சிறிய வீடொன்றை கட்டிக்கொடுக்க முன்வருவோம்.  அம்மூவரினதும் கல்விப்பயணத்தை தொடர உதவிக்கரம் நீட்டுவோம்.
ஓருயிரை பலிகொடுத்து தான் சமூகம் விழிக்க வேண்டும் என்ற பரிதாப நிலையில் இருந்து இனியாவது மீளுவோம்.

செய்தி நிருபர் :

(என்.எம்.சல்மான்)


#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2024.02.01
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured