Sunday, January 14, 2024

கம்பிரிகஸ்கஸ்வெவயில் புதிய குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இஷாக் எம்.பி யினால் திறந்து வைப்பு.


செய்தி நிருபர்: 

(என்.எம்.சல்மான்)


அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல் ஹிமா இஸ்லாமிக் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அல் ஹாஜ் நூறுல்லாஹ் நளீமி அவர்களின் முயற்சியில் குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கம்பிரிகஸ்கஸ்வெவ கிராமத்தில் அமைக்கப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் 2024.01.14 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் அல் ஹிமா இஸ்லாமிக் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் நூறுள்ளாஹ் நளீமி ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

கம்பிரிகஸ்வெவ ஜும்மா பள்ளி தலைவர் இல்யாஸ் ஆசிரியரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ம.நு.ப முன்னாள் பிரதேச பை உறுப்பினர் அஸ்ரப் அவர்கள் உட்பட ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் கம்பிரிகஸ்கஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 250 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2024.01.15
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured