Wednesday, September 20, 2023

மண்சரிவு எச்சரிக்கை அவதானமாக இருங்கள்.


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)  

நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) பெய்த கடும் மழையுடன், தேசிய கட்டிட  ஆராய்ச்சி நிறுவனம் இரவு 10.30 மணியளவில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை, அகலவத்தை, மத்துகம, வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கும் முதல் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

#Max02
http://www.max24news.com
2023.09.20       

Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured