(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
மூதூர் நீதவான் அவர்கள் முன்னிலையில் 20.09.2023 திகதி அன்று(நேற்று) குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரியான மூதூர் பள்ளிவாசல் ஒன்றின் முன்னால் தலைவர் ஓருவருக்கு எதிராகவே இந்த பினை வழங்கப்பட்டது.
குறித்த நபரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பினையிலும் செல்ல நீதிமன்றம் கட்டளை இட்டது.
குறித்த வழக்கின் எதிரி தான் பள்ளிவாசல் ஓன்றின் தலைவராக இருந்த போது பள்ளிவாசலின் கடிதத் தலைப்பில் கடிதம் வரைந்து தனது பகுதியில் அமைந்துள்ள சங்கங்களிடம் வேறு தேவைக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட ஓப்பங்களை கள்ளத்தனமாக தங்களது பள்ளிவாசல் முறைப்பாட்டுக் கடிதத்துடன் இனணத்து மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜனாப்.முபாறக் அவர்களுக்கு எதிராக முன்னால் கிழக்கு மாகாண ஆளுநர் ஒருவருக்கு 2018 ஆம் ஆண்டு முறைப்பாடு ஓன்றை செய்தாகவும், பின்னர் நடைபெற்ற விசாரனையில் குறித்த ஆவணம் போலியாக தயாரித்து வழங்கப்பட்டது என்றும் அறிய வந்த நிலையில் போலி ஆவணங்கள் தயாரித்தல் என்ற பிரிவின் கீழ் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகள் 457,459, 462 இன் கீழ் இவ்வழக்கு பாதிக்கப்பட்ட அதிபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 7 தொடக்கம் 10 ஆண்டு காலம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.
குறித்த கடிதம் பள்ளிவாசல் கடிதத் தலைப்பில் வரையப்பட்டமை குறித்த பள்ளிவாசலின் அப்போதைய நிருவாகத்திற்கு தெரியாமல் நடைபெற்றதாக தெரியவருகிறது.
குறித்த போலி ஆவணத்தில் பெயர் குறிக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தாங்கள் குறித்த அதிபருக்கு எதிரான எந்த முறைப்பாட்டிலும் கையொப்பம் இடவில்லை என சத்திய கடதாசி மூலம் மாகாண தினணக்களத்திற்கு அறிவித்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
#Max02
http://www.max24news.com
2023.09.21