அனுராதபுர மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சஜீர் அவர்களுக்கு "தேச கெளரவ புத்ர" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 09.30 ஆம் திகதியன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலையரங்கத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் மகா சங்கத்தினரால் இவ்விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மல்வத்து பீட மகா நாயக்க அதி பூஜ்ய காலி கோரல, அதி பூஜ்ய மகா விகார வங்சிக சியாமபாளி வனவாய நிகாய அதி கெளரவ அனுநாயக்க, காலி கடவத் மற்றும் பெந்தர வல்லாவிட உப சங்க நாயக்க ஆகியோரது கையொப்பத்துடன் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
"சிரீ ஷாக்கிய சிங்க அரக்கட்டளை" இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததோடு, நாடு முழுவதும் சுமார் 80 பேர் அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் மதிப்புக்குரிய மகா சங்கத்தினர், ஊடகவியலாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஐ.எம். மிதுன் கான்