ஐ.சி.சி. வருமானப் பகிர்வில் இலங்கைக்கு 128 மில்லியன் டொலர்கள் கிடைக்கவிருக்கின்றது. அதேபோல் இந்தியாவிற்கு 405 மில்லியன் டொலர்கள் கிடைக்கவிருக்கிறது. இங்கிலாந்துக்கு 139 மில்லியன் டொலர்கள் கொடுக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் தொடர் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானங்கள் அனைத்து நாட்டு கிரிக்கெட் சபைகளுக்கும் பிரித்து கொடுக்கப்படும்.
இதில் இந்திய, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளுக்கு அதிக அளவில் வருமானப் பகிர்வு கிடைத்திருந்தது.
தற்போது லண்டனில் நடை பெற்ற கூட்டத்தில் இந்தியாவுக்கு 405 மில்லியன் டொலர்கள் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி இங்கிலாந்துக்கு 139 மில்லியன் டொலர்களும், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு தலா 128 மில்லியன் டொலர்களும், சிம்பாப்வே அணிக்கு 94 மில்லியன் டொலர்களும் வழங்க ஐ.சி.சி. ஒப்புக் கொண்டுள்ளது.
மொத்தம் உள்ள 1536 மில் லியன் ரூபா வருமானப் பகிர்வில் இந்தியா 22.8 வீத சராசரி வருமானப் பகிர்வை பெறவிருக்கிறது.
