கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனினும் பரீட்சார்த்திகள் 8 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும்.
பரீட்சைக்கு சமுகமளிக்கும்போது பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை என்பவற்றை அவசியம் கொண்டுவர வேண்டும்.
பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் பரீட்சார்த்தி தான் விண்ணப்பித்துள்ள பாடம் தொடர்பான உறுதிப்படுத்தல்கள் பரிசோதனை செய்து கொள் வதோடு, அவை தொடர்பான ஏதேனும் மாற்றங்கள் காணப்படுமாயின் உடனடியாக பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் குறிப் பிட்டுள்ளது.
