கனேவல்பொலையில் இருந்து முப்தி பட்டம் முடிப்பதற்காய் பாக்கிஸ்தான் சென்றுள்ள
சகோதரன் ரிஸ்லி அவர்கள் பாக்கிஸ்தானில் நடைபெற்ற அரபு பேச்சுப்போட்டியில் சுமார் முப்பது
நாடுகளில் இருந்து வந்து போட்டியிட்ட மாணவர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவர் கனேவல்பொல ஜுபைர் மற்றும் சபீனா தம்பதியினரின் இரண்டாம் புதல்வர் ஆவார். இலங்கையில்
மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள உஸ்வத்துல் ஹசனாஹ் அரபுக்கல்லூரியில் சுமார் 8
வருடங்கள் தனது மார்க்க
கல்வியை பயின்ற இவர் தற்பொழுது பாக்கிஸ்தானில் முப்தி பட்டம் பெறுவதற்கான கற்கை
நெறியினை தொடர்ந்து வருகிறார். இவாறு இருக்கையிலேயே இவர் மேற்படி சாதனையை
புரிந்துள்ளார்.
இவரது இச்சாதனையால் இலங்கையில் பல பாகங்களிலும் உள்ள மார்க்க அறிஞர்கள் பெருமிதம்
அடைவதாக தெரிவித்ததோடு அவரை வாழ்த்தவும் செய்தனர்.