நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கனேவல்போல வட்டாரத்தில் ஐக்கிய
தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஆசிரிய ஆலோசகர் ஹபீல் ஆசிரியர் அவர்கள் பல
சவால்களுக்கு மத்தியில் தேர்தலில் வெற்றியீட்டியது
யாவரும் அறிந்ததே.
அதன் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கனேவல்பொல தேர்தல் வட்டாரத்திற்கு
சொந்தமான கனேவல்பொல, நிக்கவெவ, ரம்பேவ, ஹீனுக்கிரியாவ, எட்டிவீரவெவ, கந்துபோட ஆகிய
பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெற வைப்பதற்கு அணிதிரண்டு வாக்களித்த
மக்களுக்கு நன்றி நவிழும் கூட்டங்கள் இன்று நடந்தேறின.
இக்கூட்டங்களில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், நடந்துமுடிந்த
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கனேவல்பொல வட்டாரத்தில் வெற்றியீட்டிய ஆசிரிய ஆலோசகர்
ஹபீல் ஆசிரியர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மட் மற்றும் கட்சியின்
பல முக்கிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் தேர்தலில் வெற்றிபெற உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்த கௌரவ
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அவர்கள் அப்பிரதேச மக்களின் தேவைப்பாடுகளையும்
கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வெகுசீக்கிரத்தில் பெற்றுத்தருவதாக
உறுதியளித்தார். குறிப்பாக வீடுகளுக்கும், கடைகளுக்கும் உறுதிப்பத்திரம் (ஒப்பு/ඔප්පු) இல்லாதவர்கள்
நாளை 26.02.2018
தங்களது முழு விவரத்தோடு கலாவையில்
அமைந்திருக்கும் தனது காரியாலயத்தில் வந்து ஒப்படைக்குமாறும் அவர்களுக்கான உருதிப்பத்திரங்களை
குறிப்பிட்டதொரு கால எல்லைக்குள் பெற்றுத்தருவதாகவும் கூறினார்.
தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை நாடி வந்து பொய்யான வாக்குறுதிகள் மூலம்
மக்களை ஏமாற்றி வாக்குகளை சூரையாடிச்செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்
தேர்தலில் வெற்றிபெற்றதும் அதற்கு நன்றி தெரிவிப்பதற்காய் ஊர் ஊராய் சென்று மக்களை
பார்வையிட்டு நன்றி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் கடந்த
உள்ளூராட்சிமன்ற தேத்தலில் வெற்றியீட்டிய ஹபீல் ஆசிரியர் ஆகியோரை என்னி தாங்கள்
பெருமிதம் அடைவதாக குறித்த கூட்டங்களில் கலந்துகொண்ட மக்கள் தாங்கள் கருத்துக்களை
பரிமாறிக்கொண்டனர்.
(ஊடகப்பிரிவு – பா.உ.இஷாக் ரஹ்மான்)