அ/கனேவல்பொல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி வெகுவிமர்சையாக
நடந்தேறியது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இவ்வில்ல விளையாட்டு போட்டியானது பாடசாலை
அதிபர் சரீப்தீன் சேரின் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்கள் யாவரும் 3 இல்லங்களாக பிரிக்கப்பட்ட மிக குதூகலமாக போட்டி
நிகழ்ச்சிகள் யாவும் நடைபெற்றன. இவ்வில்ல விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி
முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பழையமாணவர்கள், பாடசாலை
அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கிய வியாபார
நிறுவனத்தினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக பாடசாலை
அதிபர் ஷரீப்தீன் சேர் அவர்கள் தெரிவித்தார்.