அனுராதபுரம் ரம்பேவ பிரதேச சபைக்கு உட்பட்ட 10 விளயாட்டு கழகங்களுக்கு
கரப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் சொந்த நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது.
இளைஞர்களது விளையாட்டு திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன, மத, கட்சி
பேதமின்றி ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கின்ற பௌத்த, முஸ்லிம் இளைஞர்களுக்கே
இவ்விளையாட்டு உபகரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வாழ்கையை நோய்நொடிகள் இல்லாமல் சரிவர கட்டமைத்து கொள்வதற்கு உடற்பயிட்சியும்,
விளையாட்டும் ஒரு முக்கியமான விடயமாகும். அந்த அடிப்படையில் நமது நாட்டின்
எதிர்கால தூண்களான இளைஞர்களை சரியான பாதையிலும் உடற்றகைமையுடனும் நாட்டை
கட்டியெழுப்பபுவதற்காய் தயார் படுத்தும் நோக்கிலேயே இவ்விளையாட்டு உபகரணங்களை இன,
மத, கட்சி பேதமின்றி அனைத்து இளைஞர்களுக்கும் பெற்றுக் கொடுத்திருப்பதாகவும்,
இன்னும் 90 விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க இருப்பதாகவும்
இவ்வுபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்
அல்-ஹாஜ் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு – பா.உ.இஷாக் ரஹுமான்