Tuesday, October 22, 2019

தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி அக்கரப்பத்தனை ஆர்ப்பாட்டம்


அக்கரப்பத்தனை – பெல்மோரல் தோட்ட மக்கள் தமக்கான தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி இன்று (22) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணம் இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்காக மாதாந்த ஊதியத்திலிருந்து ஒதுக்கப்படும் 1 000 ரூபாவும் வழங்கப்படவில்லை என தெரிவித்தே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured