இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியின் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து, 9 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த போட்டியில், முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 497 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இந்த நிலையில், 488 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ள தென்னாபிக்க அணி 8 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில், இன்று தொடர்ந்தும் விளையாடவுள்ளது.