ஹபறன மரதங்கடவள வீதியில் பயணம் செய்த
மோட்டார் சைக்கிள் ஒன்றில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (11) காலை 10 மணி அளவில் கனேவல்பொல பகுதியிலேயே இவ்விபத்து நடைபெற்றுள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து புத்தளம் நோக்கி
பயணம் செய்துகொண்டிருந்த பேரூந்தானது வீதியில்
இடப்புறம் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முயன்றபோதே
இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பேரூந்தின் சாரதி மரதங்கடவல பொலிசாரினால்
கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கனேவல்பொலயை சேர்ந்த 48 வயதுடைய முஹம்மது
அன்வர் எனும் நபர் கடும் காயங்களுடன் மரதங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை
அடுத்து மரணித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மரதங்கடவல பொலிஸார் மேலதிக
விசாரணைகளை நடத்தி வருவதாகவும் கைதுசெய்யப்பட்ட பேரூந்து சாரதி நாளை கெக்கிராவ
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் மரதங்கடவல பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மதுசங்க திசாநாயக்க தெரிவித்தார்.