(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
மட்டக்களப்பு, சொங்கலடி, உறுகாமம் பகுதியில்
காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் பொது மக்களின் வீடுகள், தோட்டங்கள், வீதி மின் கம்பங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரதேச மக்கள் யானை தாக்குதலிலிருந்து மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பியோடியுள்ளனர்.
நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் யானை
மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் ஊடுருவி அங்குள்ள மின்சார வேலிகளையும் உடைத்து வாழைத்தோட்டங்களை நாசம் செய்துள்ளதுடன், அப்பிரதேச மக்களுக்கு பல அசௌகாரியங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இது விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவைகள் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் காலம் கடத்தி வருவதாக இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் அதிகதித்துள்ள காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக தத்தமது சொந்த இருப்பிடங்களில் இரவு வேளைகளில் உறங்க முடியாத துர்ப்பாக்கியமான நிலையில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை காணப்படுவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொது மக்கள் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த பிரதேசவாசியான பிச்சைக்குட்டி இஸ்மாயில், தனது வீடு காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தானும் காயங்களுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியதாக கவலையுடன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளே.. இது உங்களின் மேலான கவனத்திற்கு.
#Max02
http://www.max24news.com
2023.09.19