(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
தேசிய மட்டத்தில் முதலாம் இடம் ஜாயாஹ் மு.ம.வி.
2022 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் தரம் 12-13 பிரிவில் அநுராதபுர மாவட்டம் கெகிராவை கல்வி வலயத்தில் கடாண்டுகம ஜாயா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி
N. NAJEERA FARVIN அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய மட்டத்தில் பாடசாலைக்கு பெருமையை சேர்த்த இம்மாணவிக்கும் பெற்றோருக்கும் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இம்முறை 2023 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய ரீதியில் போட்டி இடுவதற்கு தரம் 12-13 பிரிவில் MNF. SAHRA , RF. SAHAMA ஆகிய மாணவிகள் தெரிவாகியுள்ளனர் .
இவ்விரு மாணவிகளும் தேசிய மட்டத்தில் சிறந்த இடங்களைப் பெறுவதற்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
இப்போட்டிக்கு மாணவ, மாணவிகளை தயார் படுத்தி பயிற்றுவித்த பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் நன்றிகள். அல்லாஹ் எமது முயற்சிகள் அனைத்தையும் ஏற்று அங்கீகரித்து அருள் புரிய வேண்டும்.
#Max02
http://www.max24news.com
2023.09.19