(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு யாழ். வைத்தியசாலைகள் தீர்மானித்துள்ளன.
நாட்டில் வீழ்ச்சிகண்டுள்ள மருத்துவத் துறையை மீட்டெடுப்பதற்கான கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்தே இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படவள்ளது.
இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி. தர்சன் தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும்.
எனவே அதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக வி. தர்சன் தெரிவித்தார்.
#Max02
http://www.max24news.com
2023.09.19