Monday, September 25, 2023

சோகச்சம்பவம் இரண்டு மாதக்குழந்தையைக்காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்த Dr.பாஹிமா


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)   

உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கண்டி வைத்தியசாலை வைத்தியரொருவர் குழந்தையைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் 4ம் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதக்குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியசாலைக்கு  சென்ற பின்னர் இரத்த அழுத்தம் அதிகரித்து அவர் உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலையிலிருந்த குழந்தையை மீட்ட பிறகு, இம்மருத்துவரின் நிலை மோசமடைந்ததால், அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், அவரது இரத்த அழுத்தம் ஏற்கனவே 200 ஐத் தாண்டி இருந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கண்டி அனிவத்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பாஹிமா சஹாப்தீன் என்பவரே உயிரிழந்தவராவார்.

அவரது கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக தலையிலுள்ள நரம்பு வெடித்து இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நோய்வாய்ப்பட்ட இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்கு வந்த அவர், தனது சேவைக்காலத்தில் இரவு, பகலாக உழைத்து நோயாளிகளுக்காக தனது உயிரை தியாகம் செய்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.(JM)

#Max02
http://www.max24news.com
2023.09.25       
 
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured