செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
கொழும்பில் நாளை (24) 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (24) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (25) முற்பகல் 9 மணிவரையான 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் விநியோக திட்டத்தின் திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰
#Max02
http://www.max24news.com
2023.11.23