கொழும்பு இளையோர் பௌத்த சங்கமானது (YMBA,Colombo) யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்துடன் (Jaffna Chamber of Commerce) இணைந்து, 2023 நவெம்பர் 20 அன்று கொழும்பு இளையோர் பௌத்த சங்க சபை அறையில் “வன் ஸ்ரீலங்கா டயலொக் (One Sri Lanka Dialogue) - இளையோர், மகளிர் அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் தொடர்பில் 2024ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்டத்தின் தாக்கம்” பற்றிய வெற்றிகரமான கலந்துரையாடலை நடத்தியது.
லங்கா டைல்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அலுவலரும் கொழும்பு இளையோர் பௌத்த சங்கத்தின் தலைவருமான திரு. மகேந்திர ஜயசேகரவினால் திறம்பட நடாத்தப்பட்ட இவ்வமர்வில், சட்டத்தரணியும், கொழும்பு சங்கத்தின் (Colombo Associates) பணிப்பாளருமான திருமதி. அஜ்ரா அஸ்ஹர்; இலங்கைப் பட்டயக் கணக்களர் நிறுகத்தின் தலைவர் திரு. சஞ்ஜய பண்டார; இலங்கை பைவர் குழுத் தலைவர் (Fiverr Community) திரு. ஜனித் விக்ரமசிங்க; எச் சி பியின் தவைர்/முதன்மை ஆலோசகர் திரு. சமிந்த குமரசிறி; அட்வகேட்டாவின் முதன்மை நிறைவேற்று அலுவலர் திரு. தனனாத் பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணியும் யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் நிறுவனச் செயலாளர் திரு. இராமலிங்கம் செந்தில்குமரன் பேச்சாளர்களாக பங்கேற்றனர்.
அனைத்தையுமுள்ளடக்கிய இக்கலந்துரையாடலில், 2024ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் பன்முக தாக்கங்களை ஆராய்ந்து, நாட்டின் பிரதேச சந்தையுடன் கூட்டிணைவதற்கான வாய்ப்புவளத்தை வலியுறுத்தியது. இங்கு குறிப்பிடத்தக்க வகையில், பெண் முயற்சியாண்மையாளரான திருமதி. அஜ்ரா அஸ்ஹர், பிரான்சின் பெரிஸ் நகரில் இடம்பெற்ற சர்வதேச சட்டத்தரணிகள் சங்கங்களின் சமவாயத்திலிருந்து அண்மையில் நாட்டிற்கு திரும்பி, 2024ஆம் அண்டிற்கான வரவுசெலவுத்திட்ட கலந்துரையாடலில் நுண்ணறிதல்களை வழங்கினார். பாலின ரீதியிலான பதிலிறுப்புக்கள் தொடர்பான வரவுசெலவுத்திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்து, மூலோபாய திட்டமிடல், வலுவான மேற்பார்வை மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான மேம்பாடுகள் போன்றவற்றுக்கான முன்னெடுப்புக்களை அரசு அவசியம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அஜ்ரா அஸ்ஹர் எடுத்துரைத்த விதந்துரைப்புக்களில், பெறுகை கொள்கைகள், மகளிருக்கான இலக்கிடப்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறை (STEM) ஆதரவு, பெருநிறுவனங்களுக்கான பன்முகத்தன்மை அளவுகோல்கள், பெண்கள் சிநேகபூர்வமான வரி உதவுதொகைகள், மற்றும் உற்பத்தித்திறன் தீர்வு மானியவை ஆகியவை உள்ளடங்கின.
சட்டத் துறையில் பெண் முயற்சியாண்மையாளராக திகழும், திருமதி. அஸ்ஹர் காத்திரத்தன்மை மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பொருட்டு, வரவு செலவுத்திட்டமானது வெளிப்படையான பொறிமுறைகளுடன் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.
மகளிர் மேம்பாட்டிலிருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கு மாற்றமடைவதற்கு 2024ஆம் ஆண்டிற்கான அவசர வரவுசெலவுத்திட்டத்தின் முடிவுறுத்தலுடன், சமூக ரீதியான அனைத்தையுமுள்ளடக்கியதும் பொருளாதார மீளெழுச்சியிலான எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவரது வேண்டுகோளாக இருந்தது.