கடந்த சனிக்கிழமை 2017.07.15 தினமன்று
திறப்பனை பிரதேச சபைக்கு உற்பட்ட மொரகொட பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு நலன்
கருதி அவர்களின் தேவைகளை உணர்ந்த திறப்பனை பிரதேச சபைத்தலைவர் முஜிபுர்ரஹ்மான்
அவர்களின் அயாராத முயற்சியினால் புதிய பொலிஸ் நிலையம் ஆனது அனுராதபுர பாராளுமன்ற
உறுப்பினர் சந்திம மகிந்தசோம, பொலிஸ் அதிகாரி பூஜித்த ஆகியோரின் தலைமையில் திறந்து
வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமத்தியமாகானசபை உறுப்பினர் சஹீத் உட்பட பல அரசியல்
பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தனது அயராத முயற்சியால் கொண்டுவரப்பட்ட இந்த காவல் துறை தன் கடமையை சிறப்புறச்
செய்யும் என்பதனை தெளிவான முறையில் அவ்விடத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச
சபை தலைவர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்தினார்.