இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜீ. எஸ். பி. வரிச் சலுகையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜீ.எஸ்.பி. வரி சலுகையை நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
