கண்டி, திகனயில் ஆரம்பித்து மத்திய மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு வன்முறை பரவி வரும் நிலையில் சட்ட, ஒழுங்கை நிலை நாட்டும்படி கோரி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கொழும்பிலுள்ள அலரி மாளிகைக்கு முன்னாள் தற்போது முஸ்லிம்கள் ஒன்று கூடி வருகின்றனர்.
24 மணி நேரம் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் மத்திய மாகாணத்தின் பல இடங்களில் அச்ச சூழ்நிலை நிலவி வருகின்றமையும், நான்கு பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பன சேதப்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்டுடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

