தற்போது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் கண்டி திகன பிரதேச பிரச்சினயை
தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் பல இடங்களிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு
வருகின்றனர். குறிப்பாக திகன, தெல்தோட்ட
பிரதேசங்களில் முஸ்லிம்களது சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் அதிகளவான சேதங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றிரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்
ரஹ்மான் ஆகியோர் தெல்தோட்ட, திகன, அக்குறனை, கட்டுகஸ்தோட்ட போன்ற பிரதேசங்களுக்கு
நேரடியாக சென்று மக்களை சந்தித்து பிரச்சனைகளை நேரடியாக அவதானித்து பிரதமர்
மற்றும் பொலிஸ்மா அதிபரோடு தொடர்புகளை ஏற்படுத்தி கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு முதல் அதிகாலை 4.00 மணி வரை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்
ரஹ்மான் ஆகியோர் கண்டியில் மக்களோடு மக்களாக இருந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டு
நிலைமைகளை சற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை எமது கண்டி வாழ் முஸ்லிம்
சகோதரர்களுக்கு பாரிய உதவியாக அமைந்துள்ளது. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
மக்கள் சார்பாக நன்றிகள்.