Tuesday, October 8, 2019

சட்ட விரோத மதுபானங்களுடன் ஒருவர் கைது

Image result for arrest168 லீட்டருக்கு அதிகமான சட்டவிரோத மதுபானங்களையும்‌ 380 மில்லிகிராம்‌ ஹெரோயின்‌ போதைப்பொருளையும்‌ தம்வசம்‌ வைத்துக்கொண்டு மகிமூர்தியொன்றில்‌ பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை பானதுரை பிரதேசத்தில்‌ வைத்து காவல்துறையினர்‌ கைது செய்துள்ளனர்‌.

காவல்துறை விசேட அதிரடிப்‌ படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்படி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த சந்தேக நபர்‌ வழங்கிய தகவலுக்கு அமைய பொல்கொட ஆற்றின்‌ கரையோரத்தில்‌ இருந்து சட்டவிரோத மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கோடா 655 லீட்டரும்‌ செப்பு நாணயங்கள்‌ சிலவற்றையும்‌ காவல்துறையினர்‌ மீட்டுள்ளனர்‌.

31 வயதுடைய குறித்த சந்தேக நபர்‌ பானதுரை பகுதியில்‌ வசித்து வருவதோடு, சம்பவம்‌ தொடர்பில்‌ காவல்துறையினர்‌ மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்‌.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured