திடீரென்று இரவோடு இரவாக (31 ஆம் திகதி) எரிபொருள் விலையை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகியுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 417 ரூபாவாகியுள்ளது.
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 341 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியின் போது நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வரிசைகள் யுகம் ஆரம்பித்திருந்தது. அதனால், மக்கள் அந்த ஆட்சியைக் கவிழ்த்தனர்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதியாகியவுடன் வரிசை யுகத்தை இல்லாமலாக்குவதாக கூறி QR முறையை அறிமுகப்படுத்தியிருந்ததுடன், கட்டுக்கடங்காத எரிபொருள் விலையும் நிலவியது.
பின்னர் IMF இடன் கடன் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில், வெறுமனே ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோல் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டது. அதன் புதிய விலை 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது. அதன் புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டது. அதன் புதிய விலை 310 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டது. அதன் புதிய விலை 330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
இவ்வாறு விலையை குறைப்பது போல சொச்ச ரூபாவில் குறைத்து நேற்று (31) நள்ளிரவில் மீண்டும் எரிபொருள் விலையை சடுதியாக அதிகரித்துள்ளார்.
http://www.max24news.com
2023.09.01