Saturday, April 6, 2024

காஸாவுக்கு ஊற்றுப்பிட்டியிலிருந்து 245,000/- நன்கொடை.

ஐ.எம். மிதுன் கான்
தினகரன் - கெக்கிராவ குறூப்

காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக 245,000/- தொகையை அனுப்பி வைத்துள்ள ஊற்றுப்பிட்டி ஒன்றிணைந்த உதவும் கரங்கள்.

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலின் காரணமாக, பலஸ்த்தீன் காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை ஜனாதிபதிச் செயலகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்கான உதவித் தொகையாக, இரண்டு லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரம் ரூபாக்களை ஊற்றுப்பிட்டி ஒன்றிணைந்த உதவும் கரங்கள் அனுப்பி வைத்துள்ளது. 

இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக, ஜனாதிபதி மூலம் அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, ஒன்றிணைந்த உதவும் கரங்கள் (UAH) ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதோடு, சொந்த நாட்டிலேயே உண்ண உணவின்றி ஒதுங்க இடமின்றி உடுத்த உடையின்றி நிம்மதியற்ற அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள அந்த காஸா மக்களுக்காக பிரார்த்திக்குமாறு ஊற்றுப்பிட்டி பிரதேசவாழ் மக்கள் மிகவும் பணிவுடன் வேண்டி நிற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.


Share:

Saturday, February 10, 2024

வருடா வருடம் இலங்கை நோக்கி வரும் ஃபிளமிங்கோக்கள் இவ்வருடமும் வந்து சேர்ந்தன.

ஐ.எம். மிதுன் கான்.

வருடா வருடம் இலங்கைக்கு வருகை தரும் ஃபிளமிங்கோ பறவைகள் இம்முறையும் மன்னார் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளன.

இப்புலம்பெயர் பறவைகளை தேடிச்சென்று புகைப்படமெடுத்துவரும் வனவிலங்கு புகைப்பட கலைஞர் முஹம்மத் ரசீம் அவர்களின் ஃபிளமிங்கோ பற்றிய அவதானிப்பு.





"மிகவும் அரிதான மற்றும் உணர் திறன் கொண்ட பறவையான ஃபிளமிங்கோக்கள் தற்போது இலங்கை மன்னார் பகுதிக்கு வருகை தந்து கூட்டம் கூட்டமாக உலாவி திரிகின்றன. உணவுத்தேவை, வானிலை மாற்றம், ஜோடிகளை தேர்ந்தெடுத்தல் போன்ற காரணங்களுக்காக இவை புலம்பெயருகின்றன.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இலங்கையை நோக்கி வரும் இப்பிளமிங்கோக்கள் மன்னார் பகுதியிலுள்ள ஈர நிலங்களில் சுமார் ஐந்து மாதங்கள் வரை கழித்துவிட்டுத்தான் நாட்டை விட்டு திரும்பும். அவை இலங்கையில் இருக்கும் காலப்பகுதியானது சுற்றுலாப்பயணிகளையும் புகைப்பட கலைஞர்களையும் அதிகமதிகம் கவர்கின்றன. இவை இலங்கை மட்டுமின்றி பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்கின்றன.

மன்னாரில் தற்போது சுமார் 3000 இற்கும் அதிகமான ஃபிளமிங்கோக்களை என்னால் அவதானிக்க கிடைத்து. ஆண்டுதோறும் வருகை தரும் பிளமிங்கோக்களின் எண்ணிக்கையில் தெளிவான ஏற்றத்தாழ்வை காணக்கூடியதாக உள்ளது.



2012 இல் 12,000 ஆக காணப்பட்ட ஃபிளமிங்கோக்கள் பின்னர் 1,500 ஆகவும், பின்னர் 7,000 ஆகவும் குறைந்தது. சென்ற வருடம் 3000 தெடக்கம் 5000 வறையிலான ஃபிளமிங்கோக்கள் காணப்பட்டதோடு இவ்வருடம் அவற்றின் வருகை 3,000 ஆக காணப்படுகின்றது.


இப்பிளமிங்கோக்களை பார்ப்பதற்கென உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. திருகோணமலையை சேர்ந்த நான் கடந்த மூன்று வாரங்களாக மன்னார் பகுதியில் தங்கி நின்று இப்பிளமிங்கோக்களை புகைப்படமெடுத்து வருகின்றேன்" என  குறிப்பிட்டார்.








Share:

Wednesday, January 31, 2024

ஆயிஷாவின் மனக்குமுறல்கள்...!!!

   


அல்லாஹ்வை அஞ்சி,ஐவேளை தொழுது,
இறையாணைக்கு கீழ்படியும் ஏழைக்குடும்பத்தின் மூத்த சொத்து தான் இந்த ஆயிஷா.
நான்கு பெண்பிள்ளைகளுடன் வாப்பாவின் கூலி தொழில் வருவாயுடன் பதுளை பிரதேசத்தில் கல்கந்த பகுதியில் வாழும் ஒரு குடும்பம்

வாப்பாவும் வறியவர்,கூலித்தொழில் செய்பவர்

  எத்தனை தான் வாப்பா செய்வாரு உண்ண உணவும் இல்லை, வாழ இல்லமும் இல்லை, வாப்பா உசுரோட இருந்தா உதவும் கரங்களும் இல்லை, வாப்பா உழைப்பாரு   பார்ப்பார் என்று ஊர்வாய்கள்   புலம்புமே தவிர,குடும்பமோ, உறவுகளோ,  ஊர் தனவந்தர்களோ,
பாடசாலை ஆசான்களோ நம் ஏழை மாணவர்களை இனங்கண்டு மறைமுகமாக  ஸதகா வழங்கவும் யாரும் இல்லை

O/ L பரீட்சைக்கு இன்னும் மூன்று மாதங்கள் தான் உம்மா, கணக்குக்கு மட்டும் ஒரு கிலாஸ் போடுங்க , என்று பதறித்துடித்தேன். என்னம்மா ஒன்டும் புரியாம பேசுராய், ஐந்து நாள் சோறு தின்டு,  வாப்பாக்கு வேலையும் இல்ல, சாமனும் வெல கூட்டி, எத்துனைய தான் செய்ய???
ஊடும் இல்ல, காணியும் இல்ல, சின்ன தங்கச்சி வேலைக்கு  போரதும் இல்ல, பசியும் தாங்க ஏலா , படிக்க வைக்க சல்லி கேட்டா வாப்பா  பிரச்சின பட்ராரு என்று கதறியழுதாள்,   

 ஆயிஷாவினால் தாங்க முடியவில்லை, அவளும் அவளது ஏனைய மூன்று சகோதரிகளும் கண்ணீர் சிந்தி அழுதுக்கொண்டே பாண் துண்டை பசிக்காக உண்டு முடித்தனர்,

சற்று நேரத்தில் பாத்ரூம் சென்ற ஆயிஷா  பிரஷர் மருந்தை அருந்திவிட்டு, உம்மா கவலைப்பட வானா  ஒரு புள்ள குறைந்தாலும் வாப்பாக்கு லேசா இருக்கும்,மத்த தங்கச்சிமார நல்லா படிக்க வைங்க உம்மா என்று கூறி அப்படியே மயங்கினால்,     கத்தி பதறிக்கொண்டு வைத்தியசாலைக்குள் ஆயிஷாவுடன் ஓடினாள் தாய், அனைத்து வைத்தியர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டனர்,
அதிகாலையில்  நிலமை சரியாக வரும் ,உம்மா என்று கூப்பிடுவாள் என்ன ஆவலுடன் சென்ற தாய் நோன்பு நோற்றுக் கொண்டு   சுபஹ் தொழுகையுடன் வைத்தியசாலைக்கு செல்ல ஆயத்தமானதும், உம் குழந்தை இறைவனிடம் சென்றுவிட்டாள் என்ற குரல் ஒளித்தது  

தற்போது இவளின் மரணச்செய்திக்கு பின்னால்  குடும்பம்,ஊரார்  கரம் நீட்டுகின்றனர்???
என்ன பயன்??

ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்
சுயநலவாதிகளாக வாழ்வதை விட்டும் தவிர்ந்துக்கொள்வோம்!!
ஊர்வாதம்,  பிரதேச வாதத்தை தவிர்ப்போம்!!!
ஊரில் உள்ள தனவந்தர்கள் ஏழைகளின் கண்ணீர் துடைக்க முன்வருவீர்!!
இப்படி எத்தனை ஆயிஷாக்கள் மனவிரக்தியுடன் வாழ்வார்களோ??? 
வேண்டாம் இந்த அவல நிலை நம் சமூகத்தில்,  ஸதகா ஸகாத் வழங்கும் மார்க்கம் அல்லவா???

இந்த ஆயிஷாவின் இன்னும் மூன்று தங்கைகள் இருக்கின்றனர்.சிறிய வீடொன்றை கட்டிக்கொடுக்க முன்வருவோம்.  அம்மூவரினதும் கல்விப்பயணத்தை தொடர உதவிக்கரம் நீட்டுவோம்.
ஓருயிரை பலிகொடுத்து தான் சமூகம் விழிக்க வேண்டும் என்ற பரிதாப நிலையில் இருந்து இனியாவது மீளுவோம்.

செய்தி நிருபர் :

(என்.எம்.சல்மான்)


#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2024.02.01
Share:

Sunday, January 14, 2024

கம்பிரிகஸ்கஸ்வெவயில் புதிய குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இஷாக் எம்.பி யினால் திறந்து வைப்பு.


செய்தி நிருபர்: 

(என்.எம்.சல்மான்)


அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல் ஹிமா இஸ்லாமிக் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அல் ஹாஜ் நூறுல்லாஹ் நளீமி அவர்களின் முயற்சியில் குவைட் நாட்டு நிதியொதுக்கீட்டில் அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கம்பிரிகஸ்கஸ்வெவ கிராமத்தில் அமைக்கப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் 2024.01.14 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் அல் ஹிமா இஸ்லாமிக் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் நூறுள்ளாஹ் நளீமி ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

கம்பிரிகஸ்வெவ ஜும்மா பள்ளி தலைவர் இல்யாஸ் ஆசிரியரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ம.நு.ப முன்னாள் பிரதேச பை உறுப்பினர் அஸ்ரப் அவர்கள் உட்பட ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் கம்பிரிகஸ்கஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 250 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2024.01.15
Share:

Saturday, January 6, 2024

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்ட போட்டி!


செய்தி நிருபர் : 

(என்.எம்.சல்மான்)


-பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன்  பங்கேற்பு-

கிழக்கு ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன்  பங்கேற்றதுடன்,படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான்,டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

இப்ப போட்டியை பார்ப்பதற்கான  ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் திரண்டு இருந்தனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100000 ரூபாயும்,இரண்டாம் பரிசாக 50000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2024.01.07

Share:

Tuesday, December 26, 2023

January 2024 ஆண்டிற்கான முதல் ஒருநாள் தொடரில் முன்னய வீரர்களை மீண்டும்


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


அணிக்கு அழைத்த உபுல் தரங்க தலைமை தெரிவுக்குழு 🇱🇰

கடந்த கலமாக இளம் வீரர்களை வைத்து விளையாடி , மிக முக்கிய போட்டிகளை அனுபம் போதாமை காரணத்தால் தோல்வியை தழுவியிருந்தது.

இந்த தவறை தவிர்த்து மூத்த வீரர்களுக்கான மற்றொரு வாய்ப்பை இந்த ஒருநாள் தொடரில் ஏற்ப்படுத்தும் முகமாக மீண்டும் அணிக்கு தரங்க தெரிவுக்குழு அழைத்துள்ளது.

இந்த வகையில் : - Wanindu Hasaranga , Akila Dhananjaya , Asitha Fernando , Avishka Fernando , Nuwanindu  Fernando , Janith Liyanage , Kamindu Mendis , Jeffery Vandersay, Chamika Gunasekara ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டனர்.

இதன் காரணத்தால் -  Dhananjaya De Silva , Angelo Mathews , Kusal Janith Perera , Dimuth Karunaratne, Matheesha Pathirana, Kasun Rajitha , Dushan Hemantha ஆகியோர் வெளியேறுகிறார்கள்.

இது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.27



Share:

Sunday, December 24, 2023

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதான பார்வையாளர் (pavilion) கட்டிடத்தின் இரண்டாம் கட்ட, 50 இலட்சம் (5 Million) ரூபாய்


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)

 
மதிப்பிலானவேலைத்திட்டம் தொடங்கப்பட்டது.

கல்லூரி அதிபரின் நீண்ட நாள் முயற்சியின் விளைவாகும். பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஷாக் ரஹ்மான் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, விளையாட்டு அமைச்சின் பாடசாலை விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த 2ஆம் கட்டத்தில், பார்வையாளர் அரங்கத்தின் மேற்பகுதி மற்றும் கூரை ஆகியவை கட்டப்படுகின்றன. இந்த வேலைகள் முடிவடைந்த பிறகு, மூன்றாம் கட்ட வேலைத்திட்டம் இன்ஷா அல்லாஹ் 2024 ஜனவரியில் தொடங்கப்படும். மூன்றாம் கட்டத்தில், பார்வையாளர் அரங்கத்தின் உள்ளே உள்ள வசதிகள் மேம்படுத்தப்படும்.

இந்த பார்வையாளர் கட்டிடத்தின் முழு மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி (20 Million) ரூபாய் ஆகும். இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால், கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானம் மேலும் சிறப்பாக மாறும்.

இந்த வேலைத்திட்டத்தை தொடங்கி வைத்த பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஷாக் ரஹ்மான்  அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.24
Share:

Thursday, December 21, 2023

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


 மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்தென் மாகாணங்களில்சிலஇடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்குதிசையிலிருந்துவீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள்மிதமான அலையுடன்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.22
Share:

எமது பாடசாலை வரலாற்றுப் பயணத்தில் மற்றுமொரு எட்டாக வருடாந்த பரிசளிப்பு


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)

விழா இன்று (2023.12.21) எமது பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எமது பாடசாலை ஆசிரியர்கள், வலயக் கல்விப்பணிமனை அதிகாரிகள், அனுசரணையாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் பங்குபற்றினர்.

இப்பரிசளிப்பு விழாவில் புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ.த (சா/த) பரீட்சை, க.பொ.த (உ/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், தவணைப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் எமது பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும், குறைந்த விடுமுறைகளைப் பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.21
Share:

Monday, December 18, 2023

பிரதம அதிதியாக தௌபீக் எம்.பி. கலந்து கொண்டார்...



செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


கிண்ணியா திருமதி சித்தி சபீனா வைத்துள்ளாஹ் (கிண்ணியா சபீனா)
எழுதிய செல்லச் சிட்டுகள் எனும் 28 பாடல்கள் அடங்கிய சிறுவர் இலக்கிய நூல் வெளியீடு  சனிக்கிழமை (16) காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் கல்விமான்கள், கவிஞர்கள் அறிஞர்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம அதிதியாக திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ MS தெளபீக் அவர்களும்,

சிறப்பு அதிதியாக திட்டமிடல் பணிப்பாளர் (கி, மா) ஜனாப் முஸ்சில் அவர்களும் கலந்து கொண்டனர்.

கிண்ணியா வலய முன் பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், MN.சமீம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்வினை வழி நடாத்தினார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக கிண்ணியா வலய ஆசிரியவளவாளர் சதாத் ரெலிகான் அவர்கள் நிகழ்வுக்கு வலுவூட்டினார்.

நூல் நயவுரையினை ஆசிரியவளவாளரும் இலக்கிய ஆய்வாளருமான சன சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெஸ்மி மூஸா அவர்கள் நயம்பட வழங்கினார்!ன. 

இந்நூலினை லக்ஸ்டோ மீடியா வெளியிட்டு வைத்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிகழ்வில் லக்ஸ்டோமீடியாத் தலைவர் கலாநிதி ஏ.எல் அன்சார் வெளியீட்டுரையை வழங்கினார்.

இதில் கல்விமான்கள் அறிஞர்கள் கவிஞர்கள் சமூக ஆர்வலர்கள் முன் பள்ளி ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.18
Share:

Thursday, December 14, 2023

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 202வது கொடியேற்ற விழா ஆரம்பமானது.!

 


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 202 வது கொடியேற்று விழா இன்று (14 ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 
 
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர்,  நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது .

கொடியேற்று தினத்தில் இருந்து  தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான  எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் இருந்து பொது மக்கள் இவ் கொடியேற்ற விழாவை பார்வையிட வருகை தந்ததை  காணமுடிந்தது

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட  அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எச்.டி.எம்.எல். புத்திக, கல்முனை கடற்படை பொறுப்பதிகாரி தம்பிக ஏகனாயக்க, கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை பிரதேச செயலக கணக்காளர் ஏ.எச்.எம் அமீர் அலி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம் ரியாஸ், எம்.எச். கலிலுல் ரஹ்மான் உட்பட நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.14
Share:

Wednesday, December 13, 2023

லெபனான் தொழிலதிபருக்கு பேரதிர்ச்சி


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


ஓமன் விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த லெபனான் பிரஜையின் கைப்பையில் இருந்து 14,000 அமெரிக்க டொலர் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சீனப் பிரஜை ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

47 வயதான லெபனான் நாட்டு வர்த்தகர் ஒருவர் ஓமன் எயார்லைன்ஸின் WY-371 விமானத்தில் தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நேற்று 07.20 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

இந்த விமானத்தின் வணிக வகுப்பு இருக்கைகளில் இந்த தொழிலதிபரும் அவரது தாயும் வந்திருந்தனர், அவர்களுடன் சீன நாட்டவர் உட்பட மேலும் மூவரும் வந்துள்ளனர்.

லெபனான் நாட்டு தொழிலதிபரின் கைப்பை விமானத்தில் பயணிகள் இருக்கைக்கு மேலே உள்ள பொதிகள் வைக்கும் பெட்டியில் வைக்கப்பட்டது. விமானம் இரவில் பயணித்ததால், விமானத்தின் உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டு, பயணிகளுக்கு ஆரோக்கியமான தூக்கத்திற்கு தேவையான பின்னணி தயார் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விமானத்தின் வணிக வகுப்பில் இருந்த சீனர், லெபனான் நாட்டு தொழிலதிபரின் கைப்பையை திறந்து பணப்பையில் இருந்த 14,000 அமெரிக்க டொலர்களை திருடியுள்ளார். அதற்கு பதிலாக 18 எகிப்து நாட்டு நாணயத்தாளை பணப்பை வைத்து சென்றுள்ளார்.

இதுபற்றி எதுவும் தெரியாத லெபனான் நாட்டு தொழிலதிபர், விமானத்தில் இருந்து இறங்கி கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள வங்கிகளுக்கு சென்று தனது அமெரிக்க பணத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்ற முயற்சித்த போதே இதனை கண்டுபிடித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.14
Share:

Wednesday, December 6, 2023

பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


கவனக் குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை செலுத்தி மூன்று பேருக்கு மரணத்தை ஏற்படுத்தி மற்றுமொருவரை காயப்படுத்திய குற்றத்துக்காக தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்ல முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போதே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் பேருந்தின் உரிமையாளருக்கு 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து மிரிஹான பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.07

Share:

Tuesday, December 5, 2023

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு- மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்


மரணத்தில் சந்தேகம்

13 வயது மாணவன்   தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் (5) இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது  சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை(2)  அன்று  சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


Share:

Monday, December 4, 2023

புத்தாண்டில் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் உயரும்..!


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


2024 ஆம் ஆண்டில், இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமான அளவில் அதிகரிக்கும் என,

இலங்கை வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்தார்.

காரணம், மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை அரசு எதிர்பார்ப்பதே ஆகும் என வர குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த ஆண்டு பட்ஜெட் ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வாட் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது, வணிகர்கள் வாடிக்கையாளரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்க முயற்சிப்பார்கள். 

அதன்படி, இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாதது என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அரிசி, மாவு, சர்க்கரை, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 72 சதவீதம் உயரும். 

பொது மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும் என பேராசிரியர் அமிந்த மெத்சிலா மேலும் தெரிவித்தார்.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.05
Share:

மகளின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு தொந்தரவு செய்த கணவனை வெட்டிக்கொலை செய்த மனைவி


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


குருணாகல் - வெல்லவ பிரதேசத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு மனைவியை தாக்கிய கணவரை கொலை செய்த மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணாவார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வைத்தியசாலையில் பணியாளராக சேவையாற்றிய 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இவர் தனது மகளின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என பல முறை தனது மனைவியுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று (03) இவர் தனது மனைவியிடம் மகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவருக்குமிடையிலான வாக்குவாதம் எல்லை மீறியதால் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து இவர் தனது மனைவி மற்றும் மகனை வீட்டிற்கு வெளியே தள்ளி, தனது மகளை நிர்வாணமாக புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது குளியலறையில் இருந்த கணவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிய மனைவி அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் சமூக ஊடகங்களில் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவு செய்து பணம் சம்பாதித்து வந்தமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.12.04


Share:

Saturday, December 2, 2023

கனேவல்பொல "Riverside Boys" இன் டெங்கு ஒழிப்பு சிரமதானம்


கெக்கிராவ கனேவல்பொலயில் "ரிவர்சைட் போய்ஸ்" இளைஞர்கள்  அமைப்பினாள் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற்றது.  கனேவல்பொல பஸார், கனேவல்பொல ஆற்று வீதி ஆகிய பொது இடங்களில் இந்த சிரமதானம் நடைபெற்றது.


கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் நிருவாக பொதுச்சுகாதார ஆய்வாளர் கெ. கருனாதிலக அவர்களின் பிரதான மேற்பார்வையில் இச்சிரமதான நிகழ்வு நடைபெற்றதோடு, கனேவல்பொல பிராந்திய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டி.எம்.சி.எச்.திஸாநாயக்க, மரதங்கடவல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.டி. சமரகோன், பொலிஸ் சார்ஜன் பண்டார ஆகியோரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டு மேற்பார்வை செய்தனர்.


நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதனால் முன்னெச்சரிக்கையாக இவ்வாறான சிரமதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது பாராட்டத்தக்க விடயம் என்றும் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என்பவற்றை வேறுபடுத்தி மக்கள் அப்புறப்படுத்தினால் குப்பைகளை சரியான முறையில் முகாமை செய்ய முடியும் என்பதனால் மக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வேறுபடுத்தி அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை நடாத்துவதற்கு தாம் ஏற்பாடுசெய்துவருவதாகவும் கனேவல்பொல பிராந்திய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டி.எம்.சி.எச்.திஸாநாயக்க தெரிவித்தார்.


ஐ.எம். மிதுன் கான்







Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured