செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
கிண்ணியா திருமதி சித்தி சபீனா வைத்துள்ளாஹ் (கிண்ணியா சபீனா)
எழுதிய செல்லச் சிட்டுகள் எனும் 28 பாடல்கள் அடங்கிய சிறுவர் இலக்கிய நூல் வெளியீடு சனிக்கிழமை (16) காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கல்விமான்கள், கவிஞர்கள் அறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதம அதிதியாக திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ MS தெளபீக் அவர்களும்,
சிறப்பு அதிதியாக திட்டமிடல் பணிப்பாளர் (கி, மா) ஜனாப் முஸ்சில் அவர்களும் கலந்து கொண்டனர்.
கிண்ணியா வலய முன் பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், MN.சமீம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்வினை வழி நடாத்தினார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராக கிண்ணியா வலய ஆசிரியவளவாளர் சதாத் ரெலிகான் அவர்கள் நிகழ்வுக்கு வலுவூட்டினார்.
நூல் நயவுரையினை ஆசிரியவளவாளரும் இலக்கிய ஆய்வாளருமான சன சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெஸ்மி மூஸா அவர்கள் நயம்பட வழங்கினார்!ன.
இந்நூலினை லக்ஸ்டோ மீடியா வெளியிட்டு வைத்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிகழ்வில் லக்ஸ்டோமீடியாத் தலைவர் கலாநிதி ஏ.எல் அன்சார் வெளியீட்டுரையை வழங்கினார்.
இதில் கல்விமான்கள் அறிஞர்கள் கவிஞர்கள் சமூக ஆர்வலர்கள் முன் பள்ளி ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰
#Max02
http://www.max24news.com
2023.12.18