Saturday, September 30, 2023

உம்றா கடமை நிறைவேற்றி பின்னர் திரும்பி செல்லும் வழியில் வாகன விபத்தில் சிக்கி வபாத்தானது குடும்பம்!


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)   

ஜனாஸா அறிவித்தல்.
இன்னாலில்லாஹி வ இன்னா 
இலைஹி ராஜிஊன். 

குவைத்திலிருந்து ஆகஸ்டு 25 அன்று 
ஆந்திராவைச் சேர்ந்த கவுஸ், அவரது 
மனைவி தப்ராக், குழந்தைகள் முகம்மது 
டாமில், முகம்மது இஹான் ஆகியோர் பயணம் 
செய்த கார், உம்றா முடித்து திரும்பி செல்லும் 
வழியில் ரியாத் அருகே டிரெய்லரில் மோதி 
முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. 

உடல் முற்றிலும் எரிந்து சாம்பலானாதால், 
அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில் 
டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் 
கண்டறியப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை 
ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு அனைவரின் 
உடலும் நசீம்-அல்ராஜி மசூதியில் 
அடக்கம் செய்யப்பட்டது.

#Max02
http://www.max24news.com
2023.09.30     

Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured