Tuesday, October 17, 2023

தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைப்பு!


செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் 
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 27 வருட பூர்த்தியை சிறப்பிக்கு முகமாக எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. 

இதன் பிரதான நிகழ்வாக, மர்ஹூம் அஷ்ரப் அவர்களின நினைவுப் பேருரை பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாகவும், இதன் பிரதம அதிதியாக மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஷ்ரப் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

அத்துடன் 350 மில்லியன் ரூபா செலவில் பல்கலைகழக உத்தியோகத்தர்களுக்கான 4 மாடிகள் கொண்ட இரு வீட்டுத் தொகுதிகள் திறப்புவிழா, மரநடுகை, மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள், குறுந்திரைப்பட வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகள், புத்தகக் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டி உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சமூகமயப்படுத்தி மக்களுடன் இணைக்கும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே 24 மற்றும் 25 ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைகழகத்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பீடங்கள், நூலகம் மற்றும் இதர இடங்களுக்குச் சென்று அங்கு காட்சிப்படுத்தப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் கண்டுகளிக்க முடியும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.10.17  
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured