செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
நாளை செரியபாணி கப்பல் மூலம் 105 பேர் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரவிருப்பதாக கப்பல் சேவை இலங்கை முகவர் நிறுவனமான Pership குழுமத்தின் Asha Agencies வட்டாரங்கள் அறியத்தந்தன.
சுமார் 30 பயணிகள் வரையில் காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் செல்வர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 75க்கும் மேற்பட்ட பயணிகள் நாகபட்டினம் செல்ல பதிவுசெய்திருந்தபோதும், நாளையுடன் சேவை இடைநிறுத்தப்படுவதால் பலர் தமது பயண முடிவை மாற்றிவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
காலநிலை சீரின்மை காரணமாக நாளையுடன் சேவை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஜனவரி முதல் சேவை ஆரம்பிக்கும் என்று அவர்கள் மேலும் அறியத்தந்தனர்.
#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰
#Max02
http://www.max24news.com
2023.10.19