செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தமயந்த விஜயஸ்ரீ அவர்களின் எண்ணத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில் சுற்றுச்சூழல் பிரிவுப்பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஐ.நசார் அவர்களின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரநடுகை ஆரம்ப நிகழ்வு நேற்று (23) நடை பெற்றது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் நோக்குடன் இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நெளபீர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவுப் பெறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர்.விஜயவர்த்தன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தகர், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
சுமார் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பல இடங்களில் நடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰
#Max02
http://www.max24news.com
2023.10.24