Thursday, July 27, 2017

வடக்கில் முக்கிய விவகாரம் ஆராயப் படுகிறது

நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­லர் துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து, யாழ்ப்­பா­ணத்­தில் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்ள பிர­மு­கர்­க­ளின் பாது­காப்பை மீள­வும் உறுதி செய்­யும் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று வரு­வ­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.
பொலிஸ்மா அதி­ப­ரின் உத்­த­ர­வுக்கு அமை­வா­கவே இந்த நட­வ­டிக்கை பொலிஸ் திணைக்­க­ளத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
நல்­லூர்ப் பகு­தி­யில் கடந்த சனிக்­கி­ழமை மாலை, யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரது துப்­பாக்­கி­யைப் பறித்து அவ­ரைச் சுட்­டுக் கொலை செய்த சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்டு வரும் பிர­மு­கர்­க­ளின் பாது­காப்பு தொடர்­பில், இந்­தச் சம்­ப­வத்­தின் பின்பு மீளாய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.
வழங்­கப்­ப­டு­கின்ற பாது­காப்பு போது­மா­னதா ? மேலும் பாது­காப்பு வழங்­க­வேண்­டிய தேவை உள்­ளதா ? என்­பது தொடர்­பில் ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.
வடக்கில் முக்கிய விவகாரம் ஆராயப் படுகிறது

Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured