ஓய்வு பெற்ற, சேவையாற்ற விரும்பும் ரயில்வே ஊழியர்களை இலங்கை ரயில்வே தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவிக்கின்றார்.
ஓய்வு பெற்ற ரயில் எஞ்சின் சாரதிகள், ரயில் பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே முகாமையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டும் சமூகமளிக்காதவர்கள் வேலையில் இருந்து நீங்கிச் சென்றதாக கருதப்படும் என கடந்த சனிக்கிழமை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டார்.
இந் நிலையில் ரயில் வேவைகளை மேலும் சிறப்பாக செயற்படுத்த ஒத்துழைக்க விரும்பும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிக்கு வர விரும்பினால் ரயில்வே தலைமையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
