கனேவல்பொலையில் “JVP காரன் சமூகத்தை காட்டிக்கொடுக்கான்” என்று அடிக்கடி வீரவசனம் பேசும் மூடர்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இனத்தையும் சமூகத்தையும் காட்டிக்கொடுப்பது அவர்கள் அல்ல, சுய இலாபத்துக்காக பாமர மக்களை தவறான பாதையில் தூண்டிவிட்டும், இப்பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது சிறந்த கொந்தராத்துக்காரனாகி விட வேண்டும் என்ற வெறியுடன் கடன்பட்டு அரசியல் செய்யும் நீங்கள்தான் இனத்தையும் சமூகத்தையும் காட்டிக்கொடுக்கின்றீர்கள்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கனேவல்பொலை வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து இஷாக் ஹாஜியார் களத்தில் இறங்கினால் அவருக்கென இருக்கும் செல்வாக்கின் காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி இம்முறை ஆசனத்தை வென்றுவிடும் என்று அஞ்சிய சில மாற்றுக்கட்சி அடிவருடிகள் அவரை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் பாமர குடிமகன் ஒருவனை தூண்டிவிட்டு இஷாக் ஹாஜியாருக்கு எதிராக பேசவைத்து, இஷாக் ஹாஜியாருக்கு கனேவல்பொலையில் வாக்குகள் கிடையாது என்று ஒரு போலி விம்பத்தை உருவாக்க எத்தனித்து மூக்குடைந்து போனார்கள்.
இவ்விடத்தில் நாம் உற்றுநோக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இஷாக் ஹாஜியார் ஓர் முஸ்லிம் என்ற வகையிலும் மனிதாபிமானம் கொண்ட தலைவன் என்ற வகையிலும் அவர் அத்தருணத்தில் பொறுமை காத்து அப்பாமரனுக்கு தெளிவை பெற்றுக்கொடுத்தார். இதுவே அனுராதபுர மாவட்டத்திற்கு உரித்தான ஓர் மாற்றுமத அரசியல் தலைமையாக இருந்திருந்தால் அப்பாமரன் நாளை காலை சூரியனை கண்ணில் கண்டிருப்பானா என்பது கேள்விக்குறியாகியிருக்கும். பாமர மக்களை தூண்டிவிட்டு பெண்மைத்தனமாக அரசியல் செய்ய எத்தனிக்கும் சில அரசியல் அடிவருடிகள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் உங்களது இச்செயலே நீங்கள் தோல்வியை கண்டு அஞ்சி தடுமாறிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை சமூகத்திற்கு உணர்த்தி விட்டது.
சுயநலத்திற்காய் சமூகத்தை காட்டிக்கொடுத்து அரசியல் செய்யும் அரக்கர்கள் சிலரின் கருத்துக்களால் உசார் மடையனாகும் சில வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் இன்று நடக்கும் இத்தேர்தல் வரும் 10 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிடும். அதற்குப்பின்னால் நாம் நமது சொந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழவேண்டும். சுயநலவாதிகளின் தற்காலிக சிறிய வரப்பிரசாதங்களுக்கும், மூளைச்சளவைகளுக்கும் ஏமாந்து அரசியற் பிரமுகர்களுக்கு எதிராக செயல்படுவது உங்கள் எதிர்காலங்களை நாசமாக்கிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அனுராதபுர மாவட்ட சிறுபான்மை சமூகத்திற்கென பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க இருக்கும் ஒரே ஒரு முஸ்லிம் தலைமைத்துவம் சகோதரர் இஷாக் ஹாஜியார் மாத்திரமே. தன்னலம் கருதி அரசியலில் பிரவேசித்திருக்கும் எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லாத காழ்ப்புணர்வு கொண்ட சில வேட்பாளர்களது போலி வார்த்தைகளையும், காட்டிக்கொடுப்பு சிந்தனை அடங்கிய கருத்துக்களையும் நம்பி நமதூருக்கென நடந்தேரவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களையும் அரசியல் இலாபங்களையும் இழந்துவிடாதீர்கள்.
இஷாக் ஹாஜியார் பதவிக்கு வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே தன்னை பாராளுமன்றம் அனுப்பிய பிரதேச மக்களுக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை பல விதத்திலும் செய்து முடித்தார். அரசாங்கத்தால் சமூகத்திற்கு தேவையானவற்றை செய்ய முடியாமல் போன பல சந்தர்ப்பங்களில் தனது சொந்த நிதியில் இருந்து மக்களின் அத்தேவைகளை நிறைவேற்றியிருக்கின்றார் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. கனேவல்பொலையின் அபிவிருத்தியில் இஷாக் ஹாஜியாரின் பங்களிப்பை சற்று நோக்கினால் கனேவல்பொல ஜும்மா பள்ளியின் கட்டிட அபிவிருத்தி மற்றும் பாடசாலைக்கான அபிவிருத்தி என்பவற்றில் தனது பாரி பங்களிப்பை அவர் வழங்கியதோடு பல மென்பந்து சுற்றுப்போட்டிகளுக்கான பல நிதியுதவிகளையும் வழங்கி வைத்தார் என்பதும் யாவரும் அறிந்ததே.
உதவி செய்யும் உள்ளம்கொண்ட இப்படியான தலைவர்கள் அதிலும் குறிப்பாக நமது முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு தலைவன் கிடைப்பது மிகவும் கடினமான ஒரு காரியம். அல்லாஹ்வின் உதவியால் அனுராதபுர பிரதேச மக்களுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைத்திருப்பதையிட்டு நாம் சந்தோசப்பட வேண்டும். இனி வரும்காலங்களிலாவது நம் சிந்தனைகளை சற்று தட்டியெழுப்பி இப்படியான தலைவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த முன்நிற்போம்.
நன்றி.