கடந்த மாதம் 15 ஆம் திகதி சுரேஷ் குணசிங்க என்ற நபர் சுட்டு கொலை செய்யப்பட்டு, மற்றுமொருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
41 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஹங்வெல்ல, வனாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 4 வாள்களும், 4 கைப்பேசிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் இன்று (09) கடுவலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.