Friday, September 8, 2023

மதுபான சாலை திறக்க அனுமதிக்க வேண்டாம்.தோப்பூரில் கவனயீர்ப்பு


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 


தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபான சாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தோப்பூர் -கூர்கண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையை தொடர்ந்து சுலோகங்களை ஏந்தியவாறு நடைபவணியாக வந்து திருகோணமலை -மட்டக்களப்பு வீதியில் இவ் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.அதனால் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைவதற்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாக கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் - கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

http://www.max24news.com
2023.09.08
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured