(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
விண்வெளியில் வரலாறு படைத்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் வரும் சுல்தான் அல் நியாதியை வரவேற்க நாடு தயாராக உள்ளது. மாலையில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் நியாதியை ஆட்சியாளர்கள், மூத்த ஷேக்குகள், உயர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.
விண்வெளி நடைப்பயணம் செய்து அதிக காலம் விண்வெளியில் தங்கிய முதல் அரபு நாட்டு விண்வெளி வீரர் என்ற சாதனையுடன் நியாதி இம்மாதம் 4ஆம் தேதி காலை 8.17 மணிக்கு பூமிக்கு திரும்பினார். பின்னர் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் விண்வெளி மையத்தில் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டார். அல் நியாதியின் உடல் விரைவில் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்ப மாறியது.
15 நாள் காத்திருப்புக்குப் பின் இன்று அமீரகம் வரும் விண்வெளி வீரர் சுல்தானை வரவேற்க, சொந்த ஊரான அல் ஐன் தயாராக உள்ளது.
விண்வெளியில் தங்கியிருந்த 6 மாத காலத்தில், சுல்தான் 200க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகளில் பங்கேற்றுள்ளார். சுல்தான் அல் நியாதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படையின் முன்னாள் நெட்வொர்க் பொறியாளர் ஆவார்.
#Max02
http://www.max24news.com
2023.09.18